ஏடு- இலங்கை (2004இல் ஸ்தாபிக்கப்பட்டது)
ஏடு-சர்வதேசம 2004 ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஏடு- இலங்கை ஒரு தன்னார்வ சமூக தொண்டர் நிறுவனம் ஆகும். யுத்தத்தினாலும் சுனாமியினாலும் பாதிப்புற்று பெற்றோர்களையோ அல்லது பாதுகாவலர்களையோ இழந்த சிறார்களுக்கு தாபரிப்பு பெற்றோர் முறையை ஊக்குவித்து உதவி வருகின்றது. குறைந்த பட்சம் குழந்தைகள் தாயுடன் வீட்டு சூழலில் வாழ்வதையே ஊக்குவிப்பததுடன் தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்படலாம் எனக் கருதுகிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகள் உறுதியான குடும்ப சூழ்நிலையிலும் தனக்கு பழக்கப்பட்ட சமூக சூழ்நிலையிலும் வாழ்ந்து கல்வி கற்ற வேண்டும் என்ற நோக்கோடு இயங்கி வருவதுடன் சிறார்கள் அனைத்து துஸ்பிரயோகங்களில் இருந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இயங்கி வருகின்றது.