இலங்கை அதிகாரிகள் தாபரிப்பு வளர்ப்பை கருத்திற் கொண்டு தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அநாதை இல்லங்களில் சேர்ப்பதைக் கடைசித் தெரிவாகவே செய்கின்றனர்.
கிழக்கு மாகாணத்திற்கான சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவை திணைக்கள ஆணையாளர் அனுப்பிய சுற்றுநிருபம் ஒன்றில் ஏற்கனவே இருக்கும் அநாதை இல்லங்களிலே பிள்ளைகள் இனிமேல் சேர்ப்பதையும் புதிதாக அநாதை இல்லங்களையோ சிறுவர் இல்லங்களையோ அமைப்பதைத் தடுத்துள்ளார்.
தாபரிப்பு வளர்ப்பானது பல்வேறு திணைக்களங்களுடனும் அதனோடு தொடர்பான ஸ்தாபனங்களுடனும் சேர்த்து அமுல்படுத்தப்படுகிறது.
இலங்கையில் அமுல்படுத்தப்படுகின்ற தாபரிப்பு வளர்ப்பானது குடும்ப மற்றும் நண்பர்கள் / உறவுகள் தாபரிப்பு வளர்ப்பு என அழைக்கப்படுகின்றது. இங்கு பிள்ளைகள் மிகவும் பொருத்தமான கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் மூலம் வளர்க்கப்படுவர். (பேர்த்தி, மாமா, மாமி மற்றும் நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள்).
அநாதைப் பிள்ளைகளின் விபரங்கள் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்தினால் சேகரிக்கப்படும். பிற தொண்டர் மற்றும் சமூக ஸ்தாபனங்களும் இவர்களை அடையாளம் காண்பதில் உதவுவார்கள். கூட்டுக் குடும்பத்திலுள்ள மிகப் பொருத்தமான தாபரிப்புப் பெற்றோரை சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களம் இனங்காணும். தாபரிப்புப் பெற்றோர் ஒருவர் இனங்காணப்பட்டவுடன் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்கம் ஆனது நீதவானின் அனுமதிக்காக விண்ணப்பிக்கலாம். அனுமதி வழங்கப்பட்டவுடன் தாபரிப்புப் பெற்றோரிடம் பிள்ளை கையளிக்கப்பட்டு பிள்ளைக்கு இலங்கை ரூபா 500/- வழங்கப்படும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கூட்டுக் குடும்பத்தினால் இயற்கையான பற்றுக் காரணமாக அக்கறையான கவனிப்புப் பெறுவர். வளர்ப்பதற்கான அனுமதியை சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்தினூடாக கோருவார்கள்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வளர்ப்புப் பெற்றோரும் வறுமையில் உள்ளவர்களாகவே காணப்படுவர். சுனாமியாலும் போராலும் தமது வாழ்வாதாரங்களையும் வருமானம் ஈட்டும் மூலங்களையும் அவர்கள் இழந்திருப்பதால் இந்நிலை ஏற்பட்டிருக்கும். எனவே இப் பிள்ளைகளை ஆதரிப்பதற்குத் தேவையான மேலதிக உதவி இவர்களுக்குத் தேவைப்படும்.
ஏடு ஆனது இக் குடும்பங்களை இணங்கண்டு மாதாந்த நிதியுதவியை இப் பிள்ளைகட்கு வழங்குகிறது அல்லது இந்தக் குடும்பங்களுக்கென ஸ்திரமான வருமானம் ஈட்டித் தரும் திட்டங்களை உருவாக்குகின்றது. இப் பிள்ளைகளின் நலன் மற்றும் கல்வி முன்னேற்றம் தொடர்பில் கண்காணிக்கும்.
|