![]() |
|||
![]() |
![]() |
![]() |
![]() |
செயற்பாட்டுக் கொள்கை
ஏடு-இலங்கை ஆனது சுதந்திரமாக செயற்படுகின்ற தொண்டர் அமைப்பாகும். இது ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லையினுள் செயற்படும் வேறுவேறு குழுக்களைக் கொண்டிருக்கம். இதில் பங்கு கொள்கின்ற தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் பணிபுரியதோடு நீண்ட தொழில்சார் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களைத் கொண்டிருப்பர்.
செயற்திட்டங்களை உருவாக்குதலும் நடைமுறைப்படுத்தலும் களநிலவரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதோடு ஏடு-இலங்கை இல் முழுவதுமாகத் இவை தங்கியூள்ளன. தாபரிப்புப் பெற்றோர் முறையை கண்காணிக்கும் பணி ஏடு-இலங்கை அங்கத்தவர்களால் செய்யப்படுகின்றது. நிதி வழங்கும் நிறுவனங்களோ நன்கொடையாளர்களோ தாபரிப்புப் பெற்றோர் திட்டங்களை கண்காணிப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை. ஏடு-இலங்கை ஆனது பணம் சிறாரையூம் பாதிக்கப்பட்ட குடும்பங்களையூம் சென்றடைகி;றது என்பதை உறதி செய்யூம் பணம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதியாகவூம் வினைத்திறன் மிகு பொறிமுறை ஒன்றைக் கொண்டுள்ளது. ஏடு - இலங்கை ஆனது போதிய ஆவணங்களை நன்கொடையாளருக்கும் நிதி வழங்கும் நிறுவனங்களுக்கும் தரும். ஏடு - இலங்கை ஆனது இலங்கையிலுள்ள அல்லது இலங்கைக்கு வெளியேயூள்ள தரம் குறைந்த நிறுவனங்கள் அல்லது அறக்கட்டளைகளின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளுக்கு துணைபோகாது. ஏடு ஆனது அனாவசியமாக சிறாரை காட்சிப்படுத்துவதை விரும்பாது. கரிசனை மிகு செயற்பாடுகளை எடுத்த பின்னரே தனது நோக்கினை மேம்படுத்த வலைத்தளத்தில் விடயங்களை வெளியிடும். இந்த செயற்பாட்டுக் கொள்கையானது சிறாரின் நம்பகத்தன்மையினையும் கண்ணியத்தினையும் பாதுகாக்க உதவுவதோடு சிறார் பாதுகாப்பு கொள்கையைப் பின்பற்றவூம் உதவும். எமது இந்த செயற்பாட்டுக் கொள்கையானது ஏடு - இலங்கை அங்கத்தினரின் அனுபவங்களிலிருந்தும் - சிறாரோடும் பாதுகாப்பற்றோருடனும் பெற்ற அனுபவங்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. |
Copyright © 2011 aedu-international.org. All Rights Reserved. |