தாபரிப்பு வளர்ப்பானது மிகவும் உன்னிப்பாகக் கண்பானிக்கப்படுகிறது. ஒரு பிள்ளையானது சரியான விதத்தில் பேணப்படாதவிடத்து சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைத் திணைக்களமானது வேறு ஒரு பொருத்தமான இடத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். மிகவும் அவசியமான நிலையில் மட்டுமே அநாதை இல்லங்களில் ஒப்படைக்கும் நிலை வரலாம். இது தாபரிப்பு வளர்ப்பு சாத்தியமற்றுப் போகும் நிலையில் இறுதித் தெரிவாக நடைபெறலாம்.
மதிப்பீடு ஒன்றின்படி, அநாதை இல்லங்களிலுள்ள பிள்ளைகளில் 54% ஆனவர்கள் இரு பெற்றோர்களும் உள்ளவர்களாகவும் 26.5% ஆனோர் ஒரு பெற்றோரை உடையவர்களாகவும் காணப்படுவதாக அறியப்படுகின்றது. இவர்கள் வறுமை காரணமாக நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளனர். ஒரு பெற்றோரையுடைய அல்லது இரு பெற்றோரையுடைய இவ்வாறான சிறுவர்களுக்கு பொருளாதார உதவிகளைச் செய்வதன் மூலம் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடமிருந்து சிறுவர்கள் அநாவசியமாக பிரித்து வைக்கப்படுவதை தடுக்கலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. வறுமைக்கான தீர்வாக அநாதை இல்லங்கள் அமையக் கூடாத.
சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைத் திணைக்களமும் (Department of Probation and Child Care), யுனிசெப் உம் இணைந்து ஒரு பெற்றோரை அல்லது இரு பெற்றோர்களையும் அல்லது நெருங்கிய உறவினரைக் கொண்ட பிள்ளைகளை தேவையான உதவிகளைச் செய்வதன் மூலம் அவர்களைச் சமூகத்துடன் மீளிணைக்கும் பணியைச் செய்கின்றது. (Reunification project ).
ஸ்திரமான வீட்டுச் சுற்றாடலானது அநாதைப் பிள்ளைகட்கு மனவடுவை விரைவில் வெற்றிகொள்ள உதவுவதோடு தமது அன்புடையோரை இழந்த தாபரிப்புப் பெற்றோருக்கும் வாழ்வில் ஒரு அர்த்தத்தைத் தரும்.
A stable home environment will not only enable the orphans to overcome the trauma of loss sooner, but also, give the foster parents who have lost their loved ones a focus in life.
தாபரிப்பு வளர்ப்பின் பிரதான விடயம் உண்ணிப்பான கவனிப்பாகும். ஏடு ஆனது இலங்கையின் வடக்கு கிழக்கில் வளர்ப்புப் பராமரிப்பின் வெற்றியை உறுதி செய்ய முயல்கிறது.
நெல்சன் மண்டேலா தனது லண்டன் உரையில் ”...செல்வந்தர்களை ஏழைகளுக்கு உதவுமாறு ...” கூறினார்.
நாங்கள் எப்போதும் எமது சிறு பங்களிப்பின் மூலம் இந்த பாதுகாப்பற்ற, மனவடுவுக்குள்ளான பிள்ளைகட்கு உதவுவது அவர்களது வாழ்வைப் பிரகாசமாக்கி வலுப்படுத்தும்.

|